/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் கோட்டத்தில் 26 பேருக்குரயில் சேவா புரஸ்கார் விருது வழங்கல்
/
சேலம் கோட்டத்தில் 26 பேருக்குரயில் சேவா புரஸ்கார் விருது வழங்கல்
சேலம் கோட்டத்தில் 26 பேருக்குரயில் சேவா புரஸ்கார் விருது வழங்கல்
சேலம் கோட்டத்தில் 26 பேருக்குரயில் சேவா புரஸ்கார் விருது வழங்கல்
ADDED : மார் 27, 2025 01:07 AM
சேலம் கோட்டத்தில் 26 பேருக்குரயில் சேவா புரஸ்கார் விருது வழங்கல்
சேலம்:சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில், 69வது ரயில் சேவா புரஸ்கார் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா தலைமை வகித்து, ரயில் விபத்துகளை தவிர்க்கும்படி பணியாற்றிய ஓட்டுனர் சசிகாந்த், தண்டவாள விரிசலை கண்டறிந்த நித்யா உள்பட, 26 பேருக்கு விருதுகள் வழங்கினார். அதேபோல் கோட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பணியாளர்களுக்கு, சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து பங்கஜ்குமார் சின்ஹா பேசியதாவது:கோட்டத்துக்குட்பட்ட, 15 ஸ்டேஷன்களில், 'அம்ரித் பாரத்' திட்டத்தில், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகள் சில மாதங்களில் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். ரயில்கள் சரியான நேரத்தில் வந்து செல்வது, 93.35 சதவீதமாக அதிகரித்துள்ளது. 'சிக்னல்' தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ரயில்களின் சராசரி வேகம், 130 கி.மீ.,ல் இருந்து, 286 கி.மீ., ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.கூடுதல் மேலாளர் சிவலிங்கம், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.