/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மக்கள் குறைதீர் கூட்டம்370 மனுக்கள் வழங்கல்
/
மக்கள் குறைதீர் கூட்டம்370 மனுக்கள் வழங்கல்
ADDED : மார் 18, 2025 01:55 AM
மக்கள் குறைதீர் கூட்டம்370 மனுக்கள் வழங்கல்
சேலம்:சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் மக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ஜாதி சான்று, வேலைவாய்ப்பு, வங்கி கடன், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 356 மனுக்கள் பெறப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள் சிரமத்தை போக்க, கீழ்தளத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், 14 மாற்றத்திறனாளிகள் மனு அளித்தனர். மேலும் மாற்றத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 38,260 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

