/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒரே நேரத்தில் 7 பயிர்கள் மண் வளம் மேம்பட 'ஐடியா'
/
ஒரே நேரத்தில் 7 பயிர்கள் மண் வளம் மேம்பட 'ஐடியா'
ADDED : செப் 02, 2024 02:19 AM
வீரபாண்டி: மண் வளம் மேம்பட ஒரே நேரத்தில், 7 பயிர்களை விதைக்க வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
இதுகுறித்து வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்-குனர் கார்த்திகாயினி அறிக்கை:ஒரே பயிராக சாகுபடி செய்யாமல் ஒரே நேரத்தில், 7க்கும் மேற்-பட்ட பயிர்களை ஒன்றாக விதைத்து அவை பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதால் மண் வளம் பெருகும்.ஒரு ஏக்கரில் தானியம், எண்ணெய் வித்து, பயறு தலா இரு வகைகள், 2 பசுந்தாள் ஒரு வகை என, 7 வகை பயிர்களில் ஒரு கிலோ வீதம் விதைக்க வேண்டும்.எள், சோளம், ஆமணக்கு, தட்டைப்பயிர், அகத்தி, கொள்ளு, கொழுஞ்சி, கேழ்வரகு, உளுந்து, கடலை, சூரியகாந்தி பச்சைப்-பயிர், தினை, பனிவரகு, சாமை, மக்காச்சோளம் ஆகியவை பல பயிர் சாகுபடிக்கு ஏற்றவை. பருவத்துக்கு
ஏற்ப பயிர்களை சாகு-படி செய்வதற்கு முன், பல பயிர்களை பயிரிட்டு அதை மடக்கி உழுத பின் பருவ பயிர் சாகுபடி செய்வது சிறந்த முறை.இப்படி செய்தால் மண் வளம் காக்கப்படுவதோடு அடுத்த பயி-ருக்கு தேவையான சத்துகள் எளிதில் கிடைத்து கூடுதல் மகசூல் பெற முடியும். விவசாயிகள் மேற்கூறிய வழிமுறையை பின்பற்றி பலன் பெறலாம்.