/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தடுப்பணையை கண்டித்து விவசாயிகள் போர்க்கொடி
/
தடுப்பணையை கண்டித்து விவசாயிகள் போர்க்கொடி
ADDED : மார் 06, 2024 06:45 AM
சேலம், : அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட மையம் சார்பில் சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலர் செல்வராஜ் தலைமை வகித்தார்.அதில் பயிர் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்தல்; மேகதாது அணை கட்டுமான வரைவு அறிக்கையை மத்திய அரசு நிராகரிப்பதோடு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தென்பெண்ணையாறு தீர்ப்பாயம் அமைக்க வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.இ.கம்யூ., மாவட்ட செயலர் மோகன் பேசுகையில், ''தமிழக அரசு நெல் குவிண்டாலுக்கு, 500 ரூபாய்; கரும்பு டன்னுக்கு, 500 ரூபாய், கொப்பரை தேங்காய் கிலோவுக்கு, 50 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும். பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு, தடுப்பணை கட்டுவதை தடுக்க, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையிட வேண்டும்,'' என்றார்.

