நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,
லோக்சபா தேர்தலை அமைதியாக நடத்தும்படி, மக்கள் அச்சமின்றி ஓட்டுப்போடுவதை உறுதிப்படுத்த, போலீசாரின் கொடி அணிவகுப்பு நடத்தப்படும். லோக்சபா தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.
இதனால் பாதுகாப்பை உறுதிப்படுத்த, சேலம் மாநகர தெற்கு துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில் நேற்று, பிரபாத்தில் தொடங்கி சீலநாயக்கன்பட்டி பைபாஸ் வரை கொடி அணி வகுப்பு நடந்தது. உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், தொழில் பாதுகாப்பு படையினர், போலீசார் என, 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

