ADDED : ஏப் 01, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கைதிகளுக்குபிரியாணி வழங்கல்
சேலம்:சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள், 1,315 பேர் உள்ளனர். இவர்களுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நேற்று தியாகி திப்பு சுல்தான் பேரவை சார்பில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. சேலம் மத்திய சிறையில் கைதிகள் பராமரிக்கும் கோழிப்பண்ணையில் இருந்து, 270 கிலோ சிக்கன் மற்றும் வெளியில் இருந்து அரிசி மளிகை பொருட்கள் வாங்கி வந்து, சிறையில் வைத்து சிக்கன் பிரியாணி தயாரிக்கப்பட்டு அனைத்து கைதிகளுக்கும் வழங்கப்பட்டது.

