ADDED : ஏப் 17, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்:காடையாம்பட்டி, ஊமகவுண்டம்பட்டியில் நீர்மாரியம்மன், மல்லிகா ஈஸ்வரன், மாரியம்மன் கோவில் ஆகியவை அருகருகே உள்ளன. நேற்று காலை, 3 கோவில்களின் பூட்டுகளும் உடைக்கப்
பட்டிருந்தன. இதுகுறித்த தகவல்படி, தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்ததில், நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அதன்படி நீர்மாரியம்மன் கோவிலில் முக்கால் பவுன் தாலி, உண்டியலில் இருந்த பணம், மல்லிகா ஈஸ்வரன் கோவிலில் உண்டியல் பணம் திருடுபோனது தெரிந்தது. மாரியம்மன் கோவிலில் திருடுபோகவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.