நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி:தேவாரம் பாடல் பாடியவர் திருநாவுக்கரசு நாயனார். இவர், 77 வயதுக்கு பிறகும் ஏராளமான சிவன் கோவில்களுக்கு நடந்து சென்றே தொண்டாற்றி, நிறைய பாடல்களை பாடியவர். இவர் பிறந்த சித்திரை சதய நட்சத்திர தினமான நேற்று, அவருக்கு குரு பூஜை, தம்மம்பட்டி காசி விஸ்வநாதர் கோவிலில், சிவனடியார்கள் சார்பில் நடந்தது.
அதில் சிவனடியார்கள், மக்கள், தேவார பாடல்களை பாடினர். திருநாவுக்கரசர் சிலைக்கு அபிேஷகம், பூஜை செய்து பக்தர் களுக்கு அறுசுவை உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின் பள்ளியறை பூஜை நடந்தது.