ADDED : ஜூலை 16, 2025 02:04 AM
அ நிறம் | அளவு
கெங்கவல்லி, கெங்கவல்லி வட்டார அளவில், மாணவியருக்கு கபடி போட்டி, நேற்று முன்தினம் தெடாவூரில் நடந்தது. 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில், தெடாவூர் அரசு மேல்
நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவியர் முதலிடம் பிடித்து, மாவட்ட போட்டிக்கு தேர்வாகினர்.
இதனால் அந்த மாணவியரை, பள்ளி தலைமை ஆசிரியர் குருநாதன், உதவி தலைமை ஆசிரியர் ஜெயபால், உடற்கல்வி ஆசிரியர் எழில்பிரியா உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள்
பாராட்டினர்.
