ADDED : அக் 09, 2025 01:27 AM
அ நிறம் | அளவு
சேலம், ஓமலுார், பெரிய காடையாம்பட்டியை சேர்ந்தவர் கவுதம், 26. இவர் கடந்த, 6ல், பெங்களூரு பைபாஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை முன், ஸ்பிளண்டர் பைக்கை நிறுத்திவிட்டு சென்றார்.
மருத்துவமனையில் ஆலோசனை பெற்ற பின், மீண்டும் திரும்பிவந்தபோது, பைக்கை காணவில்லை. இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
