ADDED : மே 27, 2026 04:02 AM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்:-வாழப்பாடி, அய்யாகவுண்டர் தெருவை சேர்ந்த, டைல்ஸ் போடும் தொழிலாளி ஜெயபிரகாஷ், 32. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, கொட்டவாடியில் வெற்றிவேல், 22, என்பவருக்கு சொந்தமான வீட்டில் பணியில் ஈடுபட்டபோது மயங்கி விழுந்தார்.
வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து, மாரடைப்பால் இறந்தாரா, வேறு ஏதும் காரணமா என, விசாரிக்கின்றனர்.
