/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வரும் 19ல் பா.ஜ., மாநாடுஇன்று கால்கோள் விழா
/
வரும் 19ல் பா.ஜ., மாநாடுஇன்று கால்கோள் விழா
ADDED : ஏப் 09, 2025 01:42 AM
வரும் 19ல் பா.ஜ., மாநாடுஇன்று கால்கோள் விழா
ஓமலுார்:பா.ஜ., மாநில துணைத்தலைவர், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் ராமலிங்கம் அறிக்கை: 'தேசம் காப்போம் தமிழகம் வெல்வோம்' தலைப்பில், பா.ஜ., மாநாடு, ஏற்கனவே தலைமையால் அறிவிக்கப்பட்டபடி வரும், 19ல், ஓமலுார் அருகே பைபாஸ் சாலையில் உள்ள தாமரை திடலில் நடத்த உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில தலைவர் அண்ணாமலை பேச உள்ளார்.
பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க சாதனை விளக்க கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. அதை, மத்திய அமைச்சர் முருகன் திறந்து வைக்கவுள்ளார். தேசிய, மாநில, மாவட்ட தலைவர்கள் அமரும்படி மேடையும், 25,000 பேர் அமரும்படி பந்தல் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான கால்கோள் விழா, இன்று காலை, 9:00 மணிக்கு, மாநாட்டு திடலில் நடக்கிறது.
தொடர்ந்து அருகே உள்ள தனியார் ஓட்டலில், மாநில துணைத்தலைவர்கள் துரைசாமி, நரேந்திரன், மாவட்ட தலைவர்கள் முன்னிலையில், மாநாட்டு குழுக்களின் ஆலோசனைக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் அனைத்து குழு, மாவட்ட நிர்வாகிகள், சேலம் மேற்கு, கிழக்கு, மாநகர் மாவட்ட, மண்டல தலைவர்கள், அணி பிரிவு நிர்வாகிகள் பங்கேற்று பணிகளுக்கு பொறுப்பேற்க அழைக்கிறேன்.

