ADDED : ஏப் 09, 2025 01:42 AM
அ நிறம் | அளவு
அனுமதியின்றி வைத்த19 பேனர்கள் அகற்றம்
ஆத்துார்:ஆத்துாரில் பொது இடங்களில் அனுமதியின்றி பேனர் வைக்கக் கூடாது என, சமீபத்தில் நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் எச்சரித்திருந்தார். இந்நிலையில் நேற்று, ஆத்துார், ராணிப்பேட்டை, காமராஜர் சாலை, உடையார்பாளையம், உழவர் சந்தை, புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றியும், போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த, 19 பேனர்களை, போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி அலுவலர்கள் அகற்றினர்.
