நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
3 ஆடுகள் திருட்டு
தலைவாசல், நவ. 24-
தலைவாசல் அருகே சிறுவாச்சூரை சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னகண்ணு, 45. இவர் நேற்று முன்தினம் மாலை, ஆடுகளை வீட்டின் முன் கட்டி வைத்துள்ளார். ஆனால் நேற்று காலை, சினையாக இருந்த ஒரு ஆடு, இரு 'கிடா' என, 3 ஆடுகளை காணவில்லை. இதுகுறித்து அவர் புகார்படி,
தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.