நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே ராமிரெட்டிப்பட்டி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஊராட்சி அலுவலகம் உள்ளது.
அங்கு பள்ளி சுற்றுச்சுவர் அருகே இருந்த, 3 புங்கை மரங்கள் வெட்டப்பட்டதாக, ராமிரெட்டிப்பட்டி வி.ஏ.ஓ., தங்கமணிக்கு நேற்று முன்தினம் புகார் வந்தது. அவர் அங்கு சென்று விசாரித்ததில், வருவாய்த்துறை அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டது தெரிந்தது. வி.ஏ.ஓ., தகவல்படி, வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

