/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கவுரவ விரிவுரையாளர்கள்3ம் நாளாக ஆர்ப்பாட்டம்
/
கவுரவ விரிவுரையாளர்கள்3ம் நாளாக ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 10, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கவுரவ விரிவுரையாளர்கள்3ம் நாளாக ஆர்ப்பாட்டம்
ஆத்துார்:சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள், 3ம் நாளாக நேற்று, பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கவுரவ விரிவுரையாளர் கூட்டமைப்பு நிர்வாகி சந்திரசேகர் தலைமை வகித்தார். அப்போது, பணி நிரந்தரம், பணி பாதுகாப்புடன் இடமாறுதல் உள்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். கவுரவ விரிவுரையாளர்கள் கூறுகையில், 'கோரிக்கை நிறைவேறும் வரை ஆர்ப்பாட்டம் நடக்கும்' என்றனர்.