sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காதலிகளுடன் சேர்ந்து காதலியை கொன்று உடல் வீச்சு கல்லுாரி மாணவன் உள்பட 3 பேர் சேலத்தில் கைது

/

காதலிகளுடன் சேர்ந்து காதலியை கொன்று உடல் வீச்சு கல்லுாரி மாணவன் உள்பட 3 பேர் சேலத்தில் கைது

காதலிகளுடன் சேர்ந்து காதலியை கொன்று உடல் வீச்சு கல்லுாரி மாணவன் உள்பட 3 பேர் சேலத்தில் கைது

காதலிகளுடன் சேர்ந்து காதலியை கொன்று உடல் வீச்சு கல்லுாரி மாணவன் உள்பட 3 பேர் சேலத்தில் கைது


ADDED : மார் 06, 2025 03:46 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: காதலிகளுடன் சேர்ந்து காதலியை கொன்ற, பொறியியல் கல்-லுாரி மாணவன் உள்பட மூன்று பேரை, சேலம் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூர், விநாயகர் தெருவை சேர்ந்தவர் அல்-பியா, 32; சேலத்தில் தனியார் விடுதியில் தங்கி, தனியார் பயிற்சி மையத்தில் ஆசிரியர் தேர்வுக்கு, ஆன்லைனில் வகுப்பு எடுத்து வந்தார். கடந்த நான்கு நாட்களாக காணவில்லை. மொபைல்-போனும் சுவிட்ச் ஆப்பாக இருந்ததால், விடுதி தரப்பில்

பள்ளப்பட்டி போலீசில் புகார்

தந்தனர்.

போலீசார் விசாரணையில் திருச்சியை சேர்ந்த ஒருவரிடம் கடைசி-யாக அல்பியா மொபைல்போனில் பேசியது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, பெரம்பலுார், அருணாசல கவுண்டர் தெருவை சேர்ந்த அப்துல் ஹபீஸ், 22, பொறியியல் கல்லுாரி நான்காமாண்டு மாணவர் என்பது தெரிந்தது. அல்பியாவை கொன்று, ஏற்காடு மலையில் 60 அடி பாலம் அருகே மலைப்-பாதை பள்ளத்தில் வீசியதாக கூறவே, பள்ளப்பட்டி, ஏற்காடு போலீசார் இணைந்து தேடினர். இதில் அழுகிய நிலையில் கிடந்த அல்பியா சடலத்தை நேற்று மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: அல்பியா, அப்துல் ஹபீஸ் நான்காண்டாக காதலித்தனர். அல்பியாவுக்கு சேலத்தில் வேலை கிடைக்க, 2023ல் இங்கு வந்தார். அதன் பிறகும் அப்துல் ஹபீஸ், அடிக்கடி சேலம் வந்து அல்பியாவுடன் பழக்கத்தை தொடர்ந்தார். இந்நிலையில் சென்னை ஐ.டி., நிறுவனத்தில் பணி-புரியும் காவியா சுல்தானா, 22, என்பவருடன் அப்துல் ஹபீஸ் பழகியுள்ளார். இதையறிந்த அல்பியா தகராறு செய்து,

தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அப்துல் ஹபீஸ், அல்பியாவை கொல்ல திட்ட-மிட்டு, காவியா சுல்தானா மற்றும் முன்னாள் காதலியான விழுப்-புரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மாணவி மோனிஷா, 22, ஆகியோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து மூவரும் கடந்த, 1ம் தேதி சேலம் வந்தனர். வாடகை காரில் நான்கு பேரும் ஏற்காடு சென்றுள்ளனர். இரு பெண்களையும் தனது 'தோழிகள்' என, அல்பியாவிடம் அப்துல் ஹபீஸ் அறிமுகம் செய்துள்ளார்.

ஏற்காடு, 60 அடி பாலம் அருகே சென்ற நிலையில், அப்துல் ஹபீசும், காவியா சுல்தானாவும் சேர்ந்து, அல்பியாவை பிடித்துக்-கொண்டனர். மருந்தில்லாத வெறும் சிரிஞ்சை அல்பியா உடலில், மருத்துவ மாணவியான மோனிஷா செலுத்தியுள்ளார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தவரை, பள்ளத்தில் துாக்கி வீசிவிட்டு மூன்று பேரும் காரில் சென்று விட்டனர். தற்போது மூவரையும் கைது

செய்துள்ளோம். இவ்வாறு போலீசார் கூறினர்.

கொலை சம்பவத்தை தொடர்ந்து ஏற்காடு மலைப்பாதையில்

இரவு நேரத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதை போலீசார், மறுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us