/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முன்னாள் எம்.எல்.ஏ., மறைவு அனைத்து கட்சியினர் அஞ்சலி
/
முன்னாள் எம்.எல்.ஏ., மறைவு அனைத்து கட்சியினர் அஞ்சலி
முன்னாள் எம்.எல்.ஏ., மறைவு அனைத்து கட்சியினர் அஞ்சலி
முன்னாள் எம்.எல்.ஏ., மறைவு அனைத்து கட்சியினர் அஞ்சலி
ADDED : மே 25, 2024 02:13 AM

தலைவாசல்:தலைவாசல் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இரண்டு முறை பதவி வகித்த ராஜம்மாள்,84, வயது முதிர்வால் மரணம் அடைந்தார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆறகளூரைச் சேர்ந்தவர் ராஜம்மாள், 84. இவர், 1980ல் அப்போதைய தலைவாசல் சட்டசபை தொகுதியில்(தற்போது கெங்கவல்லி) காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, 1984ல் நடந்த தேர்தலிலும் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பின், காங்கிரஸ் கட்சியில் விலகிய அவர், ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். கடந்த 1989ம் ஆண்டு அ.தி.மு.க., இரண்டாக பிரிந்தபோது, ஜெயலலிதா அணியில் தலைவாசல் தொகுதியில், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த ராஜம்மாள், வயது முதிர்வு காரணமாக 23ம் தேதி நள்ளிரவு 11:45 மணிக்கு காலமானார். அவரது உடலுக்கு, அ.தி.மு.க., - தி.மு.க., - காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

