ADDED : ஜூன் 29, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம் நகராட்சி கருக்குப்பட்டியில், 10 நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், நேற்று மாலை, 4:00 மணிக்கு, கருக்குப்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனே நகராட்சி பணியாளர்கள் வந்து பேச்சு நடத்தி, குடிநீர் வினியோகிப்பதாக கூறியதால், மக்கள் மறியலை கைவிட்டனர். தொடர்ந்து குடிநீர் வினியோகம்
செய்யப்பட்டது.