ADDED : ஆக 14, 2024 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெத்தநாயக்கன்பாளையம்: நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன், 45. மின்வாரி-யத்தில் லாரி டிரைவராக பணிபுரிகிறார். அப்பமசமுத்திரத்தை சேர்ந்தவர் செந்தில், 41. ஆத்துாரில் மின்வாரிய, ஸ்டோர் ரூமில் ஏற்றுமதி, இறக்குமதி ஊழியராக பணிபுரிந்தார்.
இருவரும் நேற்று மதியம், 3:30 மணிக்கு, ஆத்துாரில் இருந்து வாழப்பாடி நோக்கி, 'ஸ்விப்ட்' காரில் சென்றுகொண்டிருந்தனர். மணிவண்ணன் ஓட்டினார்.
புத்திரகவுண்டன்பாளையம் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், புறவழிச்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்தில் செந்தில் உயிரிழந்தார். மணிவண்ணன் படுகாயம் அடைந்தார். ஏத்தாப்பூர் போலீசார், மணிவண்ணனை மீட்டு வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.