sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆட்டை கடித்துக்கொன்ற சிறுத்தை அணை கரையோர விவசாயிகள் கலக்கம்

/

ஆட்டை கடித்துக்கொன்ற சிறுத்தை அணை கரையோர விவசாயிகள் கலக்கம்

ஆட்டை கடித்துக்கொன்ற சிறுத்தை அணை கரையோர விவசாயிகள் கலக்கம்

ஆட்டை கடித்துக்கொன்ற சிறுத்தை அணை கரையோர விவசாயிகள் கலக்கம்


ADDED : செப் 09, 2024 07:16 AM

Google News

ADDED : செப் 09, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: அணை கரையோர கிராமத்தில் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, ஆட்டை கடித்து கொன்றதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் கொளத்துார், தின்னப்பட்டி ஊராட்சி வெள்ளக்கரட்டூர் கிராமம், மேட்டூர் அணை கரையோரம் உள்ளது. அங்கு விவசாயி சுரேஷ், 42, அவரது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்க்கிறார். நேற்று மாலை சுரேஷ், செம்மறியாடுகளை பட்டியில் அடைத்து விட்டு வெள்ளாடுகளை தோட்டம் வெளியே மரங்களில் கட்டிப்போட்டார். இரவு, 8:00 மணிக்கு, தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, ஒரு வெள்ளாட்டை கடித்து கொன்றது.

அப்பகுதி விவசாயிகள் பார்த்து கூச்சலிட, ஆட்டை விட்டு சிறுத்தை ஓடிவிட்டது. இதனால் விவசாயிகள், மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் அருகே பப்பாளி சாகுபடி செய்துள்ள விவசாயி வினோத், 45, தோட்டத்தில் சிறுத்தை ஓடியதை, பார்த்து அதிர்ச்சியடைந்து மக்களிடம் தெரிவித்தார்.ஏற்கனவே கடந்த, 26ல் சாம்பள்ளி ஊராட்சி கோம்பைக்காட்டில் கருப்பாயி என்பவரின் செம்மறியாட்டை சிறுத்தை கழுத்தை கடித்து கொன்றதாக, மக்கள் குற்றம்சாட்டினர். அப்போது வனத்துறையினர், 4 கண்காணிப்பு கேமரா பொருத்தியும் சிறுத்தை பதிவாகவில்லை. அங்கிருந்து தற்போது வெள்ளகரட்டூரில் இடம் பெயர்ந்துவிட்டதாக, மக்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us