sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கபினி நிரம்ப தேவை 1 டி.எம்.சி., நீர் காவிரியில் உபரி நீர் திறக்க வாய்ப்பு

/

கபினி நிரம்ப தேவை 1 டி.எம்.சி., நீர் காவிரியில் உபரி நீர் திறக்க வாய்ப்பு

கபினி நிரம்ப தேவை 1 டி.எம்.சி., நீர் காவிரியில் உபரி நீர் திறக்க வாய்ப்பு

கபினி நிரம்ப தேவை 1 டி.எம்.சி., நீர் காவிரியில் உபரி நீர் திறக்க வாய்ப்பு


ADDED : ஜூலை 09, 2024 10:53 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்:கர்நாடகாவின் கபினி அணை நிரம்ப இன்னும் 1 டி.எம்.சி., நீர் மட்டுமே தேவைப்படுகிறது. வரும் நாட்களில் அணைக்கு வரும் நீர், உபரியாக வெளியேற்ற வாய்ப்புள்ளது.

கர்நாடகாவில் காவிரி, துணையாறுகள் குறுக்கே கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதில், கபினி, கே.ஆர்.எஸ்., மொத்த நீர் கொள்ளளவு, 19.5 மற்றும் 49.5 டி.எம்.சி.,யாகும்.

இதில், நேற்று கபினி அணை நீர் கொள்ளளவு, 18.5, கே.ஆர்.எஸ்., கொள்ளளவு, 25.5 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. இதில், கபினி நிரம்ப ஒரு டி.எம்.சி., கே.ஆர்.எஸ்., நிரம்ப, 24.5 டி.எம்.சி., நீர் தேவை.

நேற்று இரு அணைகளுக்கும் சராசரியாக வினாடிக்கு, 6,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதில், கபினியில், 2,000 கன அடி, கே.ஆர்.எஸ்.,சில், 500 கன அடி என மொத்தம், 2,500 கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.

கபினி அணை நிரம்ப இன்னமும் 1 டி.எம்.சி., நீர் தேவை. இன்று கபினி நிரம்பும் என்பதால் அணைக்கு வரும் நீர் உபரியாக காவிரியாற்றில் வெளியேற்ற வாய்ப்புள்ளது. அதற்கேற்ப மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.






      Dinamalar
      Follow us