ADDED : ஏப் 13, 2024 11:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, 33 பறக்கும் படை, 33 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் போலீசார் உள்பட, 4 பேர் இடம் பெற்றிருந்தனர். தேர்தல் நெருங்குவதால், பறக்கும் படையுடன், தேர்தல் பணிக்கு வந்துள்ள துணை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவில் தலா, 2 முதல், 3 வீரர்கள் இணைக்கப்பட்டனர். மேலும் குழுவினர், துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் வாகன தணிக்கையை மேற்கொள்கின்றனர்.

