sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெரியார் பல்கலை விவகாரம் 2 தரப்பு கருத்து கேட்புக்கு அழைப்பு

/

பெரியார் பல்கலை விவகாரம் 2 தரப்பு கருத்து கேட்புக்கு அழைப்பு

பெரியார் பல்கலை விவகாரம் 2 தரப்பு கருத்து கேட்புக்கு அழைப்பு

பெரியார் பல்கலை விவகாரம் 2 தரப்பு கருத்து கேட்புக்கு அழைப்பு


ADDED : ஜூன் 27, 2024 04:09 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: பெரியார் பல்கலை நிர்வாகம், தொழிலாளர் சங்க நிர்வாகிகள் இடையேயான விவகாரத்தில், கருத்து கேட்பு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலையில், 10 முதல், 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி

புரிந்து வரும் தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி, சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தில், பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக ஊழியர்களுடன் தொடர் போராட்டங்களை முன்னெடுத்ததாக, சங்க நிர்வாகிகளான, தலைவர் கனிவண்ணன், பொதுச்

செயலர் சக்திவேல், அமைப்பு செயலர் கிருஷ்ணவேணி, துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோரை, முதலில் சஸ்பெண்ட், பின், 'டிஸ்மிஸ்' செய்து, பல்கலை நிர்வாகம் உத்தரவிட்டது.

பணி நிரந்தர வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்த ஆணைய முன் அனுமதியின்றி வழக்கில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாது எனக்கூறி பாதிக்கப்பட்ட, 4 பேரும், பல்கலை நிர்வாகிகளான ஜெகநாதன், பாலகுருநாதன் மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதி கேட்டு தொழிலாளர் நல கமிஷனரிடம் முறையிட்டனர். அதை விசாரித்த, சேலம் தொழிலாளர் நல உதவி கமிஷனர், இரு தரப்பு வாதங்களை கேட்டு அதன் அறிக்கையை, சென்னை தொழிலாளர் நல கமிஷனருக்கு அனுப்பினார்.

இந்நிலையில் இருதரப்பு கருத்தை அறிய, பல்கலை நிர்வாகிகள் ஜெகநாதன், பாலகுருநாதன், சங்க செயலர் சக்தி வேலுக்கு, தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலர் குமார் ஜெயந்த், கருத்துக்கேட்பு அழைப்பாணையை, கடந்த, 21ல் அனுப்பி உள்ளார். அதன்படி இருதரப்பும் ஜூலை, 16ல் தலைமை செயலகத்தில் ஆஜராகி கருத்து தெரிவிக்க வேண்டும். தவறினால் கடிதம் மூலம் வழங்கலாம் என, அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us