sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இன்று கடலுார் கைதியிடம் விசாரிக்க போலீசுக்கு அனுமதி

/

இன்று கடலுார் கைதியிடம் விசாரிக்க போலீசுக்கு அனுமதி

இன்று கடலுார் கைதியிடம் விசாரிக்க போலீசுக்கு அனுமதி

இன்று கடலுார் கைதியிடம் விசாரிக்க போலீசுக்கு அனுமதி


ADDED : மார் 07, 2025 07:47 AM

Google News

ADDED : மார் 07, 2025 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல் : தலைவாசல், மும்முடி, பெரியேரி, வீரகனுார் சாலை உள்பட, 5 இடங்களில், கடந்த ஜன., 3, 4ல் திருட்டு சம்பவம் நடந்தது. அதேபோல் மல்லியக்கரை, கோபாலபுரத்தில், ஜன., 18ல், இரு கடைகளில் திருட்டு நடந்தது. வாழப்பாடி, சிங்கிபுரம் பகுதியில், 4 கடைகளில் திருட்டு சம்பவம் நடந்தது. இதுகுறித்து தலைவாசல், மல்லியக்கரை, வாழப்பாடி போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி, எஸ்.மலையனுாரை சேர்ந்த ஆறுமுகம், 38, என்பவர், ரிஷிவந்தியத்தில் நடந்த திருட்டு வழக்கில் கைதாகி, கடலுார் சிறையில் இருப்பதும், அவர், தலைவாசல், மல்லியக்கரை, வாழப்பாடியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவர் மீது, 15 திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரிந்தது. இதனால் ஆறுமுகத்திடம் விசாரிக்க, அவரை அழைத்து வந்து, ஆத்துார் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீசார் மனு அளித்தனர். விசாரித்த, மாஜிஸ்திரேட் முனுசாமி, இன்று ஒரு நாள் அனுமதி வழங்கினார். இதனால் திருட்டு வழக்கு தொடர்பாக, தலைவாசல், மல்லியக்கரை போலீசார் இன்று அவரிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us