ADDED : செப் 16, 2024 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம் நகராட்சியில், 5, 16வது வார்டுகளில், தலா, 2 லட்சம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கு, 6வது மாநில நிதிக்குழு மானியத்தில், 1.42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நேற்று, இரு வார்டுகளிலும், தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் எம்.பி., செல்வகணபதி, பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நகராட்சி தலைவர் குணசேகரன், துணைத்தலைவர் தனம் உள்ளிட்ட கவுன்சிலர்கள், கமிஷனர் காஞ்சனா, ஒன்றிய செயலர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.