sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குடியிருப்பில் புகும் மழைநீரை தடுக்க ஓடையில் தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை

/

குடியிருப்பில் புகும் மழைநீரை தடுக்க ஓடையில் தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை

குடியிருப்பில் புகும் மழைநீரை தடுக்க ஓடையில் தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை

குடியிருப்பில் புகும் மழைநீரை தடுக்க ஓடையில் தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை


ADDED : மே 27, 2024 05:30 AM

Google News

ADDED : மே 27, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி : சேலம் மாவட்டம் ஜருகுமலையில் உற்பத்தியாகும் மழைநீர், நிலவாரப்பட்டி, தாசநாயக்கன்பட்டி வழியே செல்கிறது.

கடந்த வாரம் ஜருகுமலையில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நிலவாரப்பட்டியில் ஓடை நிரம்பி, சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், மழைநீர் புகுந்ததால், 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேநேரம் ஓடையில் சென்ற மழைநீர், தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் அங்குள்ள ராம் நகர், பாலாஜி நகர், ராஜேஸ்வரி நகர் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். தண்ணீர் குடியிருப்பு பகுதியில் நுழைவதை தடுக்க, ஓடையில், 10 அடி உயரம், 20 மீ., நீளத்தில் தடுப்புச்சுவர் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என, தாசநாயக்கன்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் வேலுசாமி, நேற்று, வீரபாண்டி தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜமுத்துவிடம் மனு அளித்தார். அவர், 'தொகுதி மேம்பாட்டு நிதியில் தடுப்புச்சுவர் கட்டி தரப்படும். அதற்கு மதிப்பீடு தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.






      Dinamalar
      Follow us