ADDED : மே 02, 2024 12:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: தலைவாசல் அருகே ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில், 8 பைரவர் சிலைகள் உள்ளன. அங்கு தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று கால பைரவருக்கு பால், நெய், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உள்பட, 16 வகை அபிேஷக பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் கால பைரவர் அருள்பாலித்தார். நேற்று, குரு பெயர்ச்சியும் நடந்ததால், தேங்காய், பூசணி, எலுமிச்சைகளில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
அதேபோல் ஆத்துார் கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியொட்டி நேற்று, பிரித்தியங்கிராதேவி, ஸ்வர்ண பைரவருக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. அப்போது, புஷ்ப அலங்காரத்தில் பிரித்தியங்கிராதேவி, ஸ்வர்ண பைரவர் அருள்பாலித்தனர். முன்னதாக உலக நன்மை, மழை பெய்ய வேண்டி சிறப்பு யாக பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

