sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வேகத்தடையில் ஏறியபோது பைக்கில் இருந்து விழுந்தவர் பலி

/

வேகத்தடையில் ஏறியபோது பைக்கில் இருந்து விழுந்தவர் பலி

வேகத்தடையில் ஏறியபோது பைக்கில் இருந்து விழுந்தவர் பலி

வேகத்தடையில் ஏறியபோது பைக்கில் இருந்து விழுந்தவர் பலி


ADDED : ஆக 21, 2024 01:42 AM

Google News

ADDED : ஆக 21, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேகத்தடையில் ஏறியபோது

பைக்கில் இருந்து விழுந்தவர் பலி

காடையாம்பட்டி, ஆக. 21-

காடையாம்பட்டி தாலுகா சட்டூரை சேர்ந்த செல்வராஜ் மகன் விநாயகமூர்த்தி, 29. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் பணி முடிந்து, அவருடன் பணிபுரியும் ஹரிக்குமாருடன், 'யுனிகான்' பைக்கில் புறப்பட்டார். ஹரிக்குமார் ஓட்டினார். நள்ளிரவு, 12:40 மணிக்கு, தர்மபுரி - சேலம் பிரதான சாலை, பண்ணப்பட்டி சர்வீஸ் சாலையில் அதிவேகமாக வந்தபோது வேகத்தடையில் ஏறியபோது, விநாயகமூர்த்தி தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மக்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியில் விநாயகமூர்த்தி இறந்துவிட்டார். காயம் அடைந்த ஹரிக்குமார், மருத்துவமனையில் உள்ளார். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

மற்றொரு விபத்து

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன், 31, பூபாலன், 24. இருவரும் நேற்று முன்தினம் பொலிரோ சரக்கு வேனில் ஓசூரில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். லோகேஸ்வரன் ஓட்டினார். இரவு, 10:30 மணிக்கு சேலம் மாவட்டம் சீரகாபாடி அருகே கொம்பாடிப்பட்டி பிரிவில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பால பணிக்கு கொட்டி வைத்துள்ள மண், கற்கள் மீது வேன் மோதியது. இதில் வேனின் முன்புறம் சேதம் அடைந்ததோடு பூபாலன் உடல் நசுங்கி பலியானார். காயம் அடைந்த லோகேஸ்வரன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us