/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்
/
நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்
நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்
நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 11, 2024 02:42 AM
தாரமங்கலம்: தாரமங்கலம், ஓடை பிள்ளையார் கோவில் அருகே, மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தாலுகா வட்ட செயலர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.
அதில் மாவட்ட செயலர் சண்முகராஜா பேசியதாவது: தாரமங்-கலம் ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீர், 17 அடி ராஜவாய்கால் வழியே செல்லும்படி நீர்வழிப்பாதை இருந்தது. உபரிநீர் ராஜ-வாய்க்கால் வழியே ஓடை பிள்ளையார் கோவிலில் உள்ள ஓடையில் கலந்து குருக்குப்பட்டி ஏரிக்கு செல்லும். அந்த நீர்வ-ழிப்பாதையை ஆக்கரமித்து கட்டப்பட்ட வீடு, கடைகளால் கடந்த முறை ஏரி நிரம்பி வெளியேறிய தண்ணீர், வீடுகளை சூழ்ந்து சாலையில் தேங்கியது. அதனால் இம்முறை ஏரி நிரம்பி வெளியேறும் தண்ணீர், வீடுகளில் தேங்குவதை தடுக்க, நீர்வழிப்-பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து காவிரி நீர்வழிப்பாதையை சீரமைத்து கால்வாய் நீர்வ-ழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற, பொதுப்பணித்துறை நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, கோஷம் எழுப்பினர். இதில் கிளை செயலர்கள் செல்வராஜ், பெரியசாமி, சக்கரபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.

