sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வெ.கரட்டூரில் மேலும் 1 கூண்டு; சிறுத்தையை தேடும் வனத்துறை

/

வெ.கரட்டூரில் மேலும் 1 கூண்டு; சிறுத்தையை தேடும் வனத்துறை

வெ.கரட்டூரில் மேலும் 1 கூண்டு; சிறுத்தையை தேடும் வனத்துறை

வெ.கரட்டூரில் மேலும் 1 கூண்டு; சிறுத்தையை தேடும் வனத்துறை


ADDED : செப் 13, 2024 07:12 AM

Google News

ADDED : செப் 13, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: சேலம் மாவட்டம் கொளத்துார், தின்னப்பட்டி ஊராட்சி வெள்ளக்கரட்டூரில் விவசாயி சுரேஷ் நிலத்தில் கட்டியிருந்த வெள்ளாட்டை, மர்ம விலங்கு கடித்து கொன்றது. இதனால் அந்த நிலம் அருகே வனத்துறை சார்பில் ஒரு கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் அதிகாலை, அருகே உள்ள தேவராஜ் பட்டியில், 5 செம்மறியாடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது.

இதையடுத்து விவசாயிகள் ஒன்றுகூடி போராட்டம் நடத்த முயன்றனர். உடனே அங்கு வந்த, சேலம் உதவி வனபாதுகாவலர் செல்வகுமார், கூடுதலாக கூண்டு வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அதன்படி அன்று இரவே, மேலும் ஒரு கூண்டு, கரடு அடிவாரம் வைக்கப்பட்டது. நேற்று, ஈரோடு, சத்தியமங்கலம் வனத்துறை ஊழியர்கள், 30 பேர், வெள்ளக்கரட்டூரில் முகாமிட்டு சிறுத்தையை தேடி, ரோந்து பணி மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us