/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
100 சதவீதம் ஓட்டுப்போட மக்களுக்கு விழிப்புணர்வு
/
100 சதவீதம் ஓட்டுப்போட மக்களுக்கு விழிப்புணர்வு
ADDED : மார் 21, 2024 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம், தாரமங்கலம், வெள்ளக்கல்பட்டியில், நரிக்குறவர் மக்கள் வசிக்கின்றனர். அதில், 100க்கும் மேற்பட்டோருக்கு ஓட்டுரிமை உள்ளது. அவர்களுக்கு தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்போடுவது குறித்து நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஓமலுார் சட்டசபை தொகுதி உதவி தேர்தல் அலுவலர் லட்சுமி, தேர்தலில் ஓட்டுப்போடுவதன் அவசியம், அனைவரும் ஓட்டுப்போட வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கினார்.
தொடர்ந்து வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் ஓமலுார் தாசில்தார் ரவிக்குமார், மண்டல தாசில்தார் பன்னீர் உள்பட பலர் பங்கேற்றனர்.

