/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்
/
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்
ADDED : ஏப் 22, 2025 01:59 AM
சேலம்:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள், திருத்தும் பணி நேற்று தொடங்கியது. ஏப்., 30க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 28 ல், தொடங்கி, ஏப்., 15 வரை நடந்தது. தமிழகம் முழுவதும் 9.13 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வில் கலந்து கொண்டனர். தேர்வு முடிந்தவுடன், விடைத்தாள்கள் மண்டல அளவிலான சேகரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் குகை மேல்நிலைப்பள்ளி, தாரமங்கலம் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று முதல், விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொடங்கியது. 3,000க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய உள்ளனர். ஏப்., 30க்குள் விடைத்தாள் திருத்தும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
************************