sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு


ADDED : நவ 01, 2025 01:45 AM

Google News

ADDED : நவ 01, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி, தேவண்ணகவுண்டனுார் கிராமம், சுண்டக்காயன்காடு பகுதியில், கூலி தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து, 17 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

சங்ககிரி தாலுகா, தேவண்ணகவுண்டனுார் கிராமம், சுண்டக்காயன் காடு பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி மனைவி மல்லிகா, 52. இவரது கணவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கட்டட கூலி வேலைக்கு மல்லிகா சென்று வருகிறார். இவருக்கு முத்துகுமார் என்ற மகனும், பொன்னியம்மாள் என்ற மகளும் உள்ளனர். மகனுக்கு திருமணமாகி இவரது வீட்டின் அருகே வேறு வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மல்லிகா, இடைப்பாடிக்கு கட்டட வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த இரட்டை வட செயின், தோடு, மோதிரங்கள் என, 17 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து மல்லிகா கொடுத்த புகாரையடுத்து, சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்களை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us