நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், டிச. 4-
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியதாளப்பாடியை சேர்ந்தவர் பாரதிராஜா, 32. இவர், அழகாபுரத்தில் கடந்த அக்., 25ல் கத்தியை காட்டி மிரட்டி, பணம், மொபைல் போனை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் மீது திருவண்ணாமலை மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது, விசாரணையில் தெரிந்தது.
இதனால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நேற்று உத்தரவிட்டார். அதேபோல் சேலம், சுக்கம்பட்டி, கோமாளி வட்டத்தை சேர்ந்த திருமூர்த்தி, 31, என்பவர், பள்ளிகள் பகுதியில் போதை பொருட்கள் விற்றதால் கைது செய்யப்பட்டார். அவர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது.