ADDED : டிச 14, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், டிச. 14--
ஓமலுார் அருகே பொட்டிய
புரத்தை சேர்ந்தவர் நவீன்குமார், 27. பெயின்டரான இவர், கடந்த, 11 மாலை, 6:45 மணிக்கு, அவரது தம்பியுடன் பைக்கில், சட்டூர் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலை நடுவே பைக்குடன் நின்றிருந்தவர்களை, 'ஓரமாக நின்று பேச வேண்டியதுதானே' என, நவீன்குமார் கேட்டார். இதில் தகராறு ஏற்பட, அங்கிருந்தவர்கள், கத்தியால் நவீன்குமாரை குத்தினர். காயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு ஓமலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் புகார்படி, காமலாபுரம், கலர்காட்டை சேர்ந்த விஷ்வா, 19, கஞ்சநாயக்கன்பட்டி, பூகாரன் கொட்டாய் கமலேஷ், 22, ஆகியோரை, ஓமலுார் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை, போலீசார் தேடுகின்றனர்.