ADDED : ஜூலை 19, 2025 01:13 AM
சேலம், ரயில் மார்க்கத்தின் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணியால், எர்ணாகுளத்தில் இருந்து காலை, 7:15 மணிக்கு புறப்பட்டு, போத்தனுார், இருகூர் வழியே இயக்கப்பட வேண்டிய டாடா நகர் எக்ஸ்பிரஸ், இன்று, வரும், 21, 24 ஆகிய நாட்களில், போத்தனுார், கோவை, இருகூர் வழியே இயக்கப்படுகிறது.
அதே நாட்களில், ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ், கோவை சந்திப்பை தவிர்த்து, போத்தனுார், இருகூர் வழியே இயக்கப்படுகிறது. இது போத்தனுார் சந்திப்பில் மதியம், 12:17 மணிக்கு வரும்.1:30 மணி நேரம் நிறுத்தம்அதேபோல் தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ், இன்று முதல், செப்., 12 வரை, அரக்கோணத்துக்கு முன், வசதியான இடத்தில், 1:30 மணி நேரம் நிறுத்தப்பட்டு, பின்னர் இயக்கப்படும். அரக்கோணம் ஸ்டேஷனில் பராமரிப்பு பணியால், இந்த தாமத நடவடிக்கை என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.