sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தகர கூடம் அகற்ற 2 நாள் அவகாசம்

/

தகர கூடம் அகற்ற 2 நாள் அவகாசம்

தகர கூடம் அகற்ற 2 நாள் அவகாசம்

தகர கூடம் அகற்ற 2 நாள் அவகாசம்


ADDED : ஆக 29, 2024 07:48 AM

Google News

ADDED : ஆக 29, 2024 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர், மாதையன்குட்டையில் இருந்து எலிகரடு செல்லும் சாலையோரம் மாரியம்மன் கோவில் உள்ளது. அதன் எதிரே சகோதரர்கள் சுப்ரமணியன், சுவாமிநாதன் வசிக்கின்றனர். அவர்கள் இடையே நில பங்கீடு செய்வதில் தகராறு ஏற்பட்டது. இதனால் சுப்ரமணியன் ஆக்ரமித்து அவர் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் தகர கூடத்தை அகற்ற, சுவாமிநாதன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆக்ரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மேட்டூர் நகரமைப்பு அலுவலர் நிர்மலாதேவி, ஆய்வாளர் குமரேசன் உள்ளிட்ட அலுவலர்கள், ஊழியர்கள், நேற்று ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அதற்கு சுப்ரமணியன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின் நகராட்சி கமிஷனர் நித்யா பேச்சு நடத்தியபோது, இரு நாட்கள் அவகாசம் கேட்டனர். அதை எழுத்துப்பூர்வமாக வாங்கிய கமிஷனர், இரு நாட்களில் அகற்றாவிட்டால், நகராட்சி சார்பில் அகற்றப்படும் என கூறிச்சென்றார்.






      Dinamalar
      Follow us