sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போலீசார் விரட்டிப்பிடித்த 2 பேர் புகையிலை விற்றது அம்பலம்

/

போலீசார் விரட்டிப்பிடித்த 2 பேர் புகையிலை விற்றது அம்பலம்

போலீசார் விரட்டிப்பிடித்த 2 பேர் புகையிலை விற்றது அம்பலம்

போலீசார் விரட்டிப்பிடித்த 2 பேர் புகையிலை விற்றது அம்பலம்


ADDED : ஆக 22, 2025 01:45 AM

Google News

ADDED : ஆக 22, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், வீராணம் போலீசார், ஆச்சாங்குட்டப்பட்டியில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, குஜராத் பதிவெண் கொண்ட கார் நிறுத்தாமல் சென்றது. தொடர்ந்து கார் வேகமாக சென்றதால், போலீஸ் தரப்பில் உஷார்படுத்தப்பட்டது.

ஏற்காடு போலீசார், கொட்டச்சேடு சாலை குறுக்கே வேனை நிறுத்தி காத்திருந்தபோது, வேகமாக வந்த அந்த கார் மோதி நின்றது. ஆனால் காரில் இருந்தவர்கள் இறங்கி, போலீசாரிடம் சிக்காமல் தப்பினர். காரில் சோதனை செய்தபோது, புகையிலை பொருட்கள் இருந்தன. தொடர்ந்து, புட்டமாத்திக்காடு பகுதியில் இருந்த இருவரையும், மக்கள் உதவியுடன், வீராணம் போலீசார் பிடித்து விசாரித்ததில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அர்ஜூன் சிங், 24, சுரேஷ், 23, என்பதும், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து, வாழப்பாடி, மேட்டுப்பட்டியில் வினியோகித்ததும், அதன்மூலம், 1.61 லட்சம் ரூபாய் வாங்கியதும் தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us