ADDED : செப் 26, 2024 02:43 AM
சேலம்: வார இறுதிநாளை முன்னிட்டு, சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் வரும், 30 வரை, 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூருக்கும், ஓசூரில் இருந்து சேலம்,
சென்னை, கடலுார், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூருக்கும் இயக்கப்படும்.மேலும் நாமக்கல்லில் இருந்து சென்னை; திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு; ஈரோட்டில் இருந்து பெங்களூரு; திருச்சியில் இருந்து ஓசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பஸ்கள்
இயக்கப்படும். பயணியர் வசதிக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம், www.tnstc.in என்ற இணையதளம் வழியே முன்பதிவு செய்யலாம் என, நிர்வாக இயக்குனர்
இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
