ADDED : மார் 25, 2025 01:11 AM
28ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நாமக்கல்:கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தி, குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காணப்படுகிறது. அதன்படி, இம்மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில், வரும், 28 காலை, 10:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கலெக்டர் உமா தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிகிறார். விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதி கள் பங்கேற்று, வேளாண் இடுபொருள் இருப்பு விபரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்து பயன்
பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.