/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கலந்தாய்வு, பணி ஆணை கேட்டு மன்றாடும் 2,963 பட்டதாரி ஆசிரியர்
/
கலந்தாய்வு, பணி ஆணை கேட்டு மன்றாடும் 2,963 பட்டதாரி ஆசிரியர்
கலந்தாய்வு, பணி ஆணை கேட்டு மன்றாடும் 2,963 பட்டதாரி ஆசிரியர்
கலந்தாய்வு, பணி ஆணை கேட்டு மன்றாடும் 2,963 பட்டதாரி ஆசிரியர்
ADDED : டிச 24, 2024 07:43 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள், உடனடி-யாக கலந்தாய்வு நடத்தி, பணி ஆணை வழங்க கேட்டு, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதன்பின், அவர்கள் கூறியதாவதுதமிழகத்தில், 3,192 பட்ட-தாரி ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப, கடந்த பிப்., 4ல், தேர்வு நடத்தி, மே மாதம் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜூன் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்தப்பட்டு, ஆகஸ்ட் மாதம் உத்தேச தேர்வு பட்டியல் வெளியானது. அவற்றில், இட ஒதுக்கீடு அடிப்படையில் சென்னை மாநகராட்சி சார்பில், 213 பேருக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டுவிட்டது. ஆதிதிராவிடர் பள்-ளியில், 16 பேர், பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் போக மீதமுள்ள 2,963 பேருக்கு இன்னமும் கலந்தாய்வு நடத்தாமல், நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி, கிடப்பில் போடப்பட்டுள்-ளது வேதனையளிக்கிறது.
ஒரே நேரத்தில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு, இட ஒதுக்கீடு பேரில், முட்டுக்கட்டை போட்டிருப்பது எந்த வகை-யிலும் ஏற்புடையதல்ல. இனியும் காலம் கடத்தாமல், நிலு-வையில் உள்ள, 2,963 பேருக்கும், உடனடியாக கலந்தாய்வு நடத்தி, பணிஆணை வழங்கிட பள்ளிக்கல்வித்துறை போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், 38 மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவல-கத்தில் மனு அளித்து, தமிழக அரசுக்கு முறையிட்டுள்ளோம். இவ்வாறு கூறினர்.