3 கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
3 கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 07, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
சேலம்:தமிழ்நாடு
அரசு நர்சு சங்கம் சார்பில், சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று காலை,
7:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை
வகித்தார்.
அதில் அரசு மருத்துவமனைகளில் புது பணியிடங்களை
தோற்றுவிக்காமல் ஏற்கனவே உள்ள காலி பணியிடங்களை நிரவல் செய்த
ஆணையை ரத்து செய்தல்; செவிலியர் பெயரை செவிலிய அலுவலர் என மாற்றுதல்;
10 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் செவிலியர்களுக்கு தொகுப்பூதிய முறையை
ரத்து செய்து விட்டு காலமுறை ஊதியம் வழங்குதல் ஆகிய, 3 கோரிக்கைகளை
வலியுறுத்தினர்.
மாவட்ட செயலர் வளர்மதி, பொருளாளர் விஜயலட்சுமி, மாநில துணைத்தலைவர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.
