ADDED : ஏப் 03, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
3 பேருக்கு குண்டாஸ்'
சேலம்:சேலம், எருமாபாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரை, கத்தியை காட்டி மிரட்டி, 14,000 ரூபாய் பறித்த வழக்கில் கடந்த மார்ச், 9ல்
கிச்சிப்பாளையத்தை சேர்ந்த தாமரைச்செல்வன், 35, வல்லரசு, 25, ராஜா, 23, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீது கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி என, பல்வேறு வழக்குகள் இருப்பதால், குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீசார் பரிந்துரைத்தனர். அதை ஏற்று, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு நேற்று உத்தரவிட்டார்.