ADDED : செப் 05, 2026 04:41 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்; நங்கவள்ளி, சூரப்பள்ளியை சேர்ந்த தேங்காய் வியாபாரி ஆனந்தன், 59. இவரது மகன் சின்ன ஆனந்தன், 39. இவர், ஏ.டி.எம்.,களில் பணம் வைக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இருவரும் சட்ட விரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடுவதாக தகவல் கிடைத்ததால், நேற்று முன்தினம், மேட்டூர் வனச்சரகர் செங்-கோட்டையன் தலைமையில் வனத்துறையினர், ஆனந்தன் வீட்டுக்கு சென்று இருவரிடமும் விசா-ரித்தனர். பின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த இரு உரிமம் பெற்ற துப்பாக்கி, ஒரு நாட்டு துப்பாக்-கியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நேற்று தந்தை, மகனை, கைது செய்தனர்.
