ADDED : பிப் 16, 2026 04:53 AM
சேலம்: சேலம் மாவட்டம் காரிப்பட்டி, ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த கணேசன் மகள் ராஜ
ராஜேஸ்வரி, 22. சேலத்தில் உள்ள, தனியார் நர்சிங் கல்லுாரியில் படிக்கிறார். நேற்று முன்தினம் கல்லுாரி சென்ற அவர், வீடு திரும்-பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், கணேசன் புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
அன்னதானப்பட்டி, சாஸ்திரி நகரை சேர்ந்த, பாஸ்ட் புட் கடைக்காரர் ராகுல். இவரது மனைவி முபிதா, 24. இவரை காண-வில்லை என, ராகுல் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அன்-னதானப்பட்டி போலீசார் தேடுகின்றனர்.
வாழப்பாடி, அத்தனுார்பட்டியை சேர்ந்தவர் பெருமாயி, 66. கடந்த, 13ல் உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி புறப்பட்ட அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் பூபாலன், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, வாழப்பாடி போலீசார்
தேடுகின்றனர்.

