ADDED : மே 22, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை, 95.பேளூரை சேர்ந்த விவசாயி காசி, 55. இவரது தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். நேற்று காலை, 7:40 மணிக்கு, தெரு நாய்கள், ஆடுகளை கடித்து குதறின.
இதில், 3 ஆடுகள் துடிதுடித்து இறந்தன. கால்நடைத்துறையினர் பிரேத சோதனை செய்தனர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.