நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: இடைப்பாடி அருகே குஞ்சாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி முத்துசாமி. இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களது செம்மறி ஆடு-களை, வீட்டின் வெளியே கட்டி வைத்திருந்தனர்.
நேற்று காலை பார்த்தபோது, மர்ம விலங்கு கடித்ததில், 3 செம்மறி ஆடுகள் இறந்து கிடந்தன. தவிர, 4 ஆடுகள் காயமடைந்திருந்தன. அரசி-ராமணி வி.ஏ.ஓ., ஸ்ரீதர், அரசிராமணி குள்ளம்பட்டி கால்நடை மருத்துவர் ராஜேஷ், சம்பவ இடத்தில் விசாரித்தனர். காயம-டைந்த ஆடுகளுக்கு, மருத்துவர் சிகிச்சை அளித்தார்.

