ADDED : செப் 20, 2024 09:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்தூர்: சேலம் மாவட்டத்தில் பல்வேறு புகாருக்கு ஆளான ஏழு எஸ்.ஐ., 13 எஸ்.எஸ்.ஐ., மற்றும் போலீசார் என 32 பேரை ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்து சேலம் எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 31 போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு புகார் அளித்து ஆளான எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ., மற்றும் போலீசார் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், சேலம் எஸ்.பி., கவுதம்கோயல், ஒரே நாளில் 7 எஸ்.ஐ., 13 எஸ்.எஸ்.ஐ., உட்பட மொத்தம் 32 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதில், கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் நான்கு எஸ்.எஸ்.ஐ., மற்றும் இரண்டு போலீசார் என ஆறு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.