ADDED : ஜூலை 31, 2026 01:54 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தின்னப்பட்டி, பூசாரி-யான்தோட்டத்தில் நில அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற, கொளத்துார் பி.டி.ஓ., அண்ணாதுரை உள்ளிட்ட அலுவ-லர்கள், நேற்று காலை, அங்கு சென்றனர். கொளத்துார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த புதுக்காடு விவசாயி செல்லமுத்து, 57, அவரது மனைவி செல்வராணி, 55, மகன் கார்த்திக், 32, சுப்ரமணி-யபுரத்தை சேர்ந்த நடராஜன், 47, ஆகியோர், ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, பி.டி.ஓ.,விடம் வாக்குவாதத்தில் ஈடு-பட்டனர். தொடர்ந்து அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து, பி.டி.ஓ.,வை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பி.டி.ஓ., புகார்படி, கொளத்துார் போலீசார் விசாரித்து, செல்ல-முத்து உள்பட,4 பேரையும் கைது செய்தனர்.
